வியாழன், 8 ஏப்ரல், 2010

முல்லா இரவு 12 மணிக்குத் தூங்காமலே நடந்து கொண்டிருந்தார்.

முல்லா ஏன் இந்த இரவில் தூங்காமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட போது, பொழுது புலரும் போது சூரிய வெளிச்சம் என் தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி விடுமோ என்றபயம் காரணமாக தான், தூங்காமலே இருந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
முல்லாவைப் போன்றபலரும் நன்மைகள் வரும்போது சந்தோஷப்படுவதற்கு பதிலாக முன்பு நடந்த தீமைகள் அல்லது வரவாய்ப்புள்ள துன்பங்களை நினைத்து இன்றைக்கு சந்தோஷம் அடையும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறி விடுகின்றனர்.

அன்பு நண்பர்களே சந்தோஷம் அடையும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமை யாகப் பயன்படுத்துங்கள். துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் அவமானங்கள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும், அவற்றிலிருந்தெல்லாம் என்ன படிப்பினைகள் கிடைக்கின்றன, என்ன அனுபவங்கள் கிடைக்கின்றன, எவ்வளவு தன்னம்பிக்கை கிடைக்கிறது, எவ்வளவு பலம், சமாளிக்கும் திறன், உத்வேகம் கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் சந்தோஷம் சாத்தியம். சாதனைகள் நிச்சயம்.

நன்மைகளை எண்ணுங்கள்

நன்மையும், தீமையும், சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இருபக்கங்கள். இவை இரண்டும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. ஆகவே நாம் நமக்கு வரும் தீமைகளில் மட்டும் கவனம் செலுத்தி என்றும் துக்கத்துடன் வாழ்வதை விட்டுவிட்டு, நமக்குக் கிடைத்த நன்மைகளை, பலன்களை, உதவிகளை, சாதனைகளை வரிசைப்படுத்துங்கள். அவ்வப்போது தினம், தினம் அந்த நன்மைகளை நினைவு கூறுங்கள்.

உங்கள் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு வந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள் என்றால், நீங்கள்

அ) பேரழிவுகளில் தாய், தந்தை, உறவினர் களை இழந்த குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகில் வாழ்கிறார்கள். அவர்களை எண்ணிப்பாருங்கள்.

ஆ) ஒரு நேரம் கூட உணவு கிடைக்காமல் பட்டினியால் உலகம் முழுவதும் தினம் தினம் இறந்துபோகின்றனர் பலர். அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு மேல்.

இ) இரண்டு கால்கள், இரண்டு கைகள் இல்லாமல் சிறப்பாக சாதித்து கொண்டு இருக்கும் நிக்விஜீனிக் போன்றவர்களோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது உங்கள் நிலை எவ்வளவு மேல் என எண்ணிப் பாருங்கள்.

இதுவரை கிடைத்த அனைத்து நன்மைகள், ஆசிர்வாதங்கள்,

சாதனைகள், வரிசைப்படுத்தி மீண்டும் மீண்டும் திருப்பிப் பாருங்கள். உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை நம் தன்னம்பிக்கை, தன்மதிப்பு, தன்முனைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தும். இந்த நிலை நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சி மனநிலை நம் செயல்திறனை மேலும் அதிகப் படுத்தும். சாதனைகள் சாத்தியமாகும்.

5. இசையை ரசியுங்கள்

இங்கிலாந்து காவல்துறைலண்டன் மாநகர சுரங்க ரயில்

நிலையங்களில் இசையை ஒலிபரப்ப ஆரம்பித்த பின்பு, அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, அதுவரையிலும் நடைபெற்று வந்த வழிப்பறி, பிக்பாக்கெட்டுகள் 33% குறைந்து விட்டது. பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் 25% குறைந்து விட்டது. சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் 37% குறைந்துவிட்டது.

இதனால் அரசுதுறைகள், அனைத்திற்கும் நிம்மதி, பொதுமக்களுக்கு சந்தோஷம்.

சுரங்க ரயில்நிலையங்களில் செய லாற்றும், பயன்படுத்தும் ஒவ்வொருவருடைய செயல்திறனும் அதிகரிக்கின்றது.

மேற்கண்ட செய்தி இசையினை பயன்படுத்தி, எத்தகைய செயல்களிலும் செயல்திறனை அதிகப்படுத்தி நன்மையை அதிகரிக்கலாம் என்பதை புரிய வைக்கின்றது.

இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும், இசையை பயன்படுத்தி, அதன் நன்மைகளை அடையத் துவங்கி விட்டனர் என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, மருத்துவம், விளை யாட்டு, காவல்துறை, போக்குவரத்துதுறை, வணிகம், மேலாண்மையில், கல்வி, என ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் இசையின் பயன்பாடு படர்ந்து காணப்படுகிறது.

இசையினால் சந்தோஷத்தை எப்படி பெருக்க முடியும்

இசையின் உதவியால் கீழ்கண்டவைகளில் நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தலாம்.

அ) மருத்துவத்தில் இசை

இசை மருத்துவத்தின் உதவியால் கீழ்கண்ட நன்மைகளை அடையலாம்.

1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்

2. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தலாம்

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

4. கேன்சர் போன்றநோய்களினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்

5. மன அமைதியை ஏற்படுத்தலாம்

6. மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது

7. சோக நிகழ்வுகள், துன்பங்கள் தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிய அவதாரம் எடுக்க உதவுகிறது.

8. சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. சீரான சுவாசம் சிறந்த உடல் மற்றும் மனநலத்திற்கு வழிவகை செய்கிறது.

9. உத்வேகம், உற்சாகம், பலம், தன்னம்பிக்கையை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இசை உதவுகின்றது.

10. அமைதியான நித்திரையை (தூக்கம்) வழங்குகிறது சிறந்த இசைமழை.

ஆ) கல்வியில் இசை

ஆல்பிரட் ஐன்ஸ்டின் படிப்பதற்கே தகுதி யில்லாதவர் என்று பள்ளியை விட்டு வெளி யேற்றப்பட்ட பின்பு, அவர் இசை பயிற்சிகளைப் பெற்று பியானோ இசையில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்தி புலமையுடன் ஈடுபட்டார். அவர் தன் இசையின் ஈடுபாடும், தன்னுடைய சாதனைகளுக்கு ஒரு காரணமாக கூறியிருந்தார். மட்டுமல்ல பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூட இசையுடன் கூடிய வகுப்பறைகள், மாணவர்களின் கற்கும் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது.

மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், இசை அவர்களுக்கு கீழ்கண்ட விதங்களில் உதவுகிறது.

1. கவனக்குவிப்பை ஏற்படுத்த உதவுகிறது.

2. தேர்வு பயம், பதட்டம், மனஅழுத்தம், போன்றவற்றைமாற்றஉதவுகின்றது.

3. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. சோர்வை நீக்கி உற்சாகத்தை, உத்வேகத்தை வழங்குகிறது.

5. தெளிவான மனநிலையை உருவாக்க உதவுகிறது.

இ) விளையாட்டுத் துறையில்

பயிற்சியின் போது இசையைப் பயன் படுத்துவதனால், விளையாட்டு

வீரர்களின் கவனம் ஒருமுகப்படுத்தப் படுவதுடன், சோர்வு இன்றித் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஈ) மேலாண்துறையில்

இன்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணிக்காத்து, எப்போதும் உற்சாக மனநிலையில் செயல்பட வைக்க இசையைப் பயன்படுத்த துவங்கியுள்ளது கண்கூடு.

இவ்வளவு சிறப்புகள் கொண்ட இசை யினைச் சரியான முறையில் முழு மனதுடன் பயன்படுத்துவோம். உடல்நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காப்போம். செயல்திறனை அதிகரித்து சாதனைகளைக் குவிப்போம். சந்தோஷம் பொங்க வாழ்வோம்.

6. நல்லது செய்யுங்கள் : நன்மையே நடக்கும்

முல்லா தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பானையில் ரகசியமாக வெள்ளி நாணயங்களை சேமித்து வந்தார். சில தினங்கள் தாண்டி திடீரென்று முல்லா ஊரைக் கூட்டி ஒரே அழுகை அழ ஆரம்பித்தார். ஊரார் என்ன முல்லா என்ன ஆச்சு என்று கேட்ட போது, முல்லா எனக்கு இப்போது தங்க காசு தேவைப்படுகிறது. ஆகையால் நான் வெள்ளிக் காசுகள் சேமித்து வைத்திருந்த பானையில் தங்க காசுகளைத் தேடினேன். கிடைக்கவில்லை எனவே தான் அழுகை அழுகையாக வருகிறது என்று தேம்பினார்.

முல்லாவிடம் அவர் தவறை சுட்டிக் காட்ட முயன்ற ஊரார், இனி இவரை புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டனர்.

இவரைப் போன்றே நம்மில் பலர் நம் உறவு வங்கிக் கணக்கில் சந்தேகம், கோபம், பொறாமை, கெடுதல், அலட்சியம், பழி வாங்குதல், பேராசை, தர்க்கம், குதர்க்கம், கோழ்மூட்டுதல் என பல்வேறு தீமைகளை (வெள்ளி காசுகள்) வழங்கி விட்டு அன்பு, உதவி, கருணை, அனுசரணை, ஆதரவு, (தங்கக்காசு) போன்ற நன்மைகளைத் திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் வங்கியில் செலுத்தாத பணத்தை நாம் பெறமுடியாதது போன்று நம்மால் (பிறருக்கு) வழங்கப்படாத நன்மைகளை (பிறரிடம்) நாம் எதிர்பார்ப்பது எப்படி நியாயம்.

வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டுச் சாதனை சிகரத்தை அடைய வேண்டுமானால், நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்ற உண்மையே.

நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை விளையும். நாம் அன்பு வழங்கினால் நமக்கும் அன்பு கிடைக்கும். நாம் உதவி செய்தால் நமக்கும் உதவி கிடைக்கும்.

அதே போன்று நாம் தீமையைச் செய்தால், தீமையைத்தான் எதிர்பார்க்க முடியும். தீமையே திரும்பவும் வந்து சேரும்.

ஆகவே நன்மையே செய்யுங்கள், நன்மையே பேசுங்கள், நன்மையே பாருங்கள். உங்களுக்கும் நன்மையே விளையும். உங்களைச் சுற்றி உங்களுக்கு நன்மை மட்டுமே செய்பவர் கூட்டம் அதிகரிக்கும். அத்தகைய ஆதரவு கூட்டத்தின் அற்புத ஆசிகள் மற்றும் ஆதரவுடன் நீங்கள் சந்தோஷ சாதனை வாழ்வு வாழ்வது நிச்சயம்.

சந்தோஷ வழிமுறைகள் தொடரும்…