சனி, 19 மார்ச், 2011
ஆண்களிடம் பெண்கள் உடலுறவைத்தவிர மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பது என்ன...?
மனம் கவர்ந்த ஆணிடமிருந்து ஒரு பெண் எதிர்பார்ப்பது என்ன?. வெறும் உடல் ரீதியான உறவுடன் தொடர்பை முடித்துக் கொள்ள விரும்புவதில்லை பெண்கள். அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.
அது உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது என்பதை நிறையப் பேர் புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டால் உறவுகள் வலுப்படும், இனிமை கூடும்.
நிறையப் பெண்களுக்கு பேச்சு மிகப் பிடிக்கும். அன்பான, ஆறுதலான பேச்சை தங்களது பார்ட்னர்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறார்கள் பெண்கள். பேசிக் கொண்டே நடப்பது, பேச்சின் மூலம் அன்பை, நட்பை பகிர்ந்து கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது.
நீண்ட தூரம் நடந்தபடி பேசுவது என்பது இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது ஒரு அருமையான அனுபவமும் கூட. நான் உன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த பேச்சு நடை உதவும்.
சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை இருக்கும். இதை தங்களது காதலர் விரும்புவாரா மாட்டாரோ என்ற கவலையும் அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள், முயற்சிப்பார்கள்.
இதை ஆண்கள்தான் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும். உன் அழகு உருவத்தில் இல்லை, மனதில்தான் இருக்கிறது, உனது பேச்சுதான் உனக்கு அழகு, உனது சிரிப்புதான் அழகு என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும்.
அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு பெரும் துணைவர்களாக முடியும். செக்ஸ் என்பது வாழ்க்கையில் பிரிக்க முடியாதது – திருணம் செய்தவர்களுக்கு.
அதேசமயம், அதை இனிய முறையில் அனுபவிக்க வேண்டும். மனத்தாங்கல், வருத்தம், வலி, வேதனையுடன் அதை அனுபவிக்கக் கூடாது. அது மனதில் நிரந்தர காயத்தையும், நீங்கா வலியையும் ஏற்படுத்தி விடலாம். பெண்களைப் பொறுத்தவரை மன ரீதியான திருப்தியையும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஆண்கள் அவசரக்காரர்கள். காரியம் முடிந்தவுடன் மறந்து விடுவார்கள் சற்று முன் நடந்ததை. ஆனால் பெண்கள் அப்படி இல்லை. அந்த இனிய உணர்வின் நினைவுகளில் சில மணி நேரங்களாவது மூழ்கிக் கிடப்பார்கள்.
தன்னிடம் தனது பார்ட்னர் எப்படி நடந்து கொண்டார் என்பதிலிருந்து பலவற்றையும் அவர்கள் மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருப்பார்கள். எனவே உறவுக்கு முன்பும் சரி, உறவின்போதும் சரி ஆண்கள் பெண்களிடம் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும்.
உறவுக்குப் பின்னரும் நம்மை நினைத்து காதலியோ அல்லது மனைவியோ சந்தோஷத்துடன் நினைத்துப் பார்க்கும்படியாக அவர்களை நடத்த வேண்டும். செக்ஸ் உறவின்போது மட்டும்தான் பெண்கள் சந்தோஷமடைவார்கள் என்றில்லை.
அன்பான, ஆறுதலான முத்தம், கைகளைப் பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு என்று கூறுவது, சின்னச் சின்ன ரொமான்ஸ்கள் என நிறைய விஷயங்கள் பெண்களுக்குப் பிடித்தமானவை. இவற்றை நிறைய பேர் நிறைய செய்வதில்லை.
லைட்டாக இவற்றை செய்து விட்டு நேரடியாக போய் விடுகிறார்கள். முன்விளையாட்டுக்களைத் தவிர இதுபோல நிறைய விஷயங்கள் உள்ளன. காதலி அல்லது மனைவியின் கால்களை இதமாக அழுத்தி விடலாம், லேசான மசாஜ் செய்யலாம்.
விரல்களைப் பிடித்து சொடுக்கு எடுக்கலாம். தலையைக் கோதி விடலாம். அன்பு மொழி பேசலாம்… இப்படி நிறைய இருக்கிறது. எல்லாம் முடிந்து உறவை திருப்திகரமாக முடித்த பின்னர் அவ்வளவுதான் தூங்கப் போக வேண்டியதுதான் என்று கிளம்பிப் போவது கூடவே கூடாது.
செக்ஸ் உறவின்போது ஆண்களுக்கு என்டார்பின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் படு வேகமாக இயங்கி, எல்லாம் முடிந்த பின்னர் அப்படியே சோர்ந்து போய் விடுவார்கள். ஆனால் பெண்களுக்கு அப்படி இல்லை.
அது, நிதானமாகவும், விவேகமாகவும்தான் நடக்கிறது. எனவே உறவு முடிந்த பின்னரும் கூட பெண்கள் கிளர்ச்சியுடன்தான் இருப்பார்கள். எனவே உறவை முடித்த பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் ஆசுவாசமாக, அன்பாக இணைந்து இருப்பது நல்லது.
இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனாலும் நிறைய பேர், அந்த சமயத்தில் ‘அதை’ மட்டும் சரியாக செய்து விட்டு மற்றவற்றில் கோட்டை விட்டு விடுவதால் பல கோணல்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதெல்லாம் சரியாக இருந்தால் கோர்ட் பக்கம் யாருமே போகத் தேவையில்லை-விவாகரத்து கோரி.
எடை கூடாமல் இருக்க…
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
* கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
* காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.
* பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
* இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ளவேண்டும்.
* படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக்கொள்ளவேண்டும்.
* இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
* தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
* முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
* ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.
திங்கள், 4 அக்டோபர், 2010
சிங்கப்பூரில் தனது முதலாவது ரீடெயில் கிளையை அமைத்தது ஐசிஐசிஐ
மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சிங்கப்பூரில், தனது முதலாவது ரீடெயில் கிளையை அமைத்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தா கோச்சார் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் வங்கி, 2003ம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரில் கார்பரேட் வங்கியாக இயங்கி வருவதாகவும், தற்போது தான் முழுமையான வங்கி செயல்பாட்டிற்குரிய அனுமதியை பெற்றிருப்பதாகவும், இனி, தங்கள் சிங்கப்பூர் கிளை மூலம், அனைத்து வங்கி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். தங்களது வங்கியின் சிங்கப்பூர் கிளையில், லோன் சிண்டிகேசன், இந்தியன் கார்ப்பரேட்ஸ், தொழிற் சேவைகள் மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்காக ஸட்க்ரக்சர்டு பைனான்சியல் சொல்யூசன்ஸ் உள்ளிட்ட உதவிகளை செய்து தர உள்ளதாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடுத்து, சிங்கப்பூரில் ரீடெயில் கிளையை அமைத்த வங்கி தங்களுகடையது என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புதன், 9 ஜூன், 2010
கை கழுவிய நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனையானது
சென்னை : "பதினைந்தாயிரம் மாணவர்கள் ஒரே நேரத்தில் கை கழுவிய நிகழ்ச்சி, "கின்னஸ்' புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது' என சுகாதாரத்துறை செயலர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: சுகாதாரமாக கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி, "உலக கை கழுவும் நாளாக' கடைபிடிக்கப்படுகிறது. மேலை நாடுகளில் சிறு கரண்டி மற்றும் முள் கரண்டிகளை உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 90 சதவீதம் மக்கள் உணவு உண்பதற்கு கைகளையே பயன்படுத்துகின்றனர். கைகள் சுத்தமில்லாமல் இருந்தால், குழந்தைகளுக்கு வயிற்றுநோய், சுகாதாரத் தொற்று ஏற்படுகிறது. உணவு உண்பதற்கு முன்பும், கழிவறையில் இருந்து வந்த பிறகும் சோப்பு போட்டு கை கழுவுதல் மிகவும் அவசியம். இதனால், குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை 25 சதவீதம் கட்டுப்படுத்த முடியும். உலகத்தில் 15 லட்சம் குழந்தைகள் வயிற்று நோயால் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கை சுத்தம் இல்லாதது தான். இதனடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு தமிழக பொது சுகாதாரத்துறை பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து, சென்னை நேரு விளையாட்டு அரங்கில் 15 ஆயிரத்து 115 மாணவர்களை ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில் கை கழுவும் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சி "கின்னஸ்' சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு சுப்புராஜ் கூறியுள்ளார்.
செவ்வாய், 1 ஜூன், 2010
வீடு-வாகன கடன் வட்டியை குறைத்த இந்தியன் வங்கி
சென்னை: வீடு மற்றும் வாகனக் கடனுக்கான வட்டி விகிதத்தை இந்தியன் வங்கி குறைத்துள்ளது.
இதன்படி 5 வருடத்தில் திரும்பச் செலுத்தும் ரூ. 20 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி 10.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரையான கடனுக்கான வட்டி 11.5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைக்கப்படும் என இந்தியன் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வட்டி விகிதம் திருத்தி அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
கார் கடன்:
மூன்று ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் கார் உள்ளிட்ட வாகனக் கடனுக்கான மாறாத வட்டி விகிதம் 11 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் கால அளவுள்ள கடனுக்கான வட்டி 11.25 சதவீதத்திலிருந்து 10.25 சதவீதமாகக் குறைக்கப்பகிறது.
இரு சக்கர வாகனம்:
இரு சக்கர வாகனக் கடனுக்கான வட்டி 13 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது 2 வருட முடிவில் மாற்றி அமைக்கப்படும் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
வியாழன், 8 ஏப்ரல், 2010
முல்லா இரவு 12 மணிக்குத் தூங்காமலே நடந்து கொண்டிருந்தார்.
முல்லா ஏன் இந்த இரவில் தூங்காமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட போது, பொழுது புலரும் போது சூரிய வெளிச்சம் என் தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி விடுமோ என்றபயம் காரணமாக தான், தூங்காமலே இருந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
முல்லாவைப் போன்றபலரும் நன்மைகள் வரும்போது சந்தோஷப்படுவதற்கு பதிலாக முன்பு நடந்த தீமைகள் அல்லது வரவாய்ப்புள்ள துன்பங்களை நினைத்து இன்றைக்கு சந்தோஷம் அடையும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறி விடுகின்றனர்.
அன்பு நண்பர்களே சந்தோஷம் அடையும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமை யாகப் பயன்படுத்துங்கள். துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் அவமானங்கள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும், அவற்றிலிருந்தெல்லாம் என்ன படிப்பினைகள் கிடைக்கின்றன, என்ன அனுபவங்கள் கிடைக்கின்றன, எவ்வளவு தன்னம்பிக்கை கிடைக்கிறது, எவ்வளவு பலம், சமாளிக்கும் திறன், உத்வேகம் கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் சந்தோஷம் சாத்தியம். சாதனைகள் நிச்சயம்.
நன்மைகளை எண்ணுங்கள்
நன்மையும், தீமையும், சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இருபக்கங்கள். இவை இரண்டும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. ஆகவே நாம் நமக்கு வரும் தீமைகளில் மட்டும் கவனம் செலுத்தி என்றும் துக்கத்துடன் வாழ்வதை விட்டுவிட்டு, நமக்குக் கிடைத்த நன்மைகளை, பலன்களை, உதவிகளை, சாதனைகளை வரிசைப்படுத்துங்கள். அவ்வப்போது தினம், தினம் அந்த நன்மைகளை நினைவு கூறுங்கள்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு வந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள் என்றால், நீங்கள்
அ) பேரழிவுகளில் தாய், தந்தை, உறவினர் களை இழந்த குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகில் வாழ்கிறார்கள். அவர்களை எண்ணிப்பாருங்கள்.
ஆ) ஒரு நேரம் கூட உணவு கிடைக்காமல் பட்டினியால் உலகம் முழுவதும் தினம் தினம் இறந்துபோகின்றனர் பலர். அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு மேல்.
இ) இரண்டு கால்கள், இரண்டு கைகள் இல்லாமல் சிறப்பாக சாதித்து கொண்டு இருக்கும் நிக்விஜீனிக் போன்றவர்களோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது உங்கள் நிலை எவ்வளவு மேல் என எண்ணிப் பாருங்கள்.
இதுவரை கிடைத்த அனைத்து நன்மைகள், ஆசிர்வாதங்கள்,
சாதனைகள், வரிசைப்படுத்தி மீண்டும் மீண்டும் திருப்பிப் பாருங்கள். உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை நம் தன்னம்பிக்கை, தன்மதிப்பு, தன்முனைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தும். இந்த நிலை நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சி மனநிலை நம் செயல்திறனை மேலும் அதிகப் படுத்தும். சாதனைகள் சாத்தியமாகும்.
5. இசையை ரசியுங்கள்
இங்கிலாந்து காவல்துறைலண்டன் மாநகர சுரங்க ரயில்
நிலையங்களில் இசையை ஒலிபரப்ப ஆரம்பித்த பின்பு, அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, அதுவரையிலும் நடைபெற்று வந்த வழிப்பறி, பிக்பாக்கெட்டுகள் 33% குறைந்து விட்டது. பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் 25% குறைந்து விட்டது. சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் 37% குறைந்துவிட்டது.
இதனால் அரசுதுறைகள், அனைத்திற்கும் நிம்மதி, பொதுமக்களுக்கு சந்தோஷம்.
சுரங்க ரயில்நிலையங்களில் செய லாற்றும், பயன்படுத்தும் ஒவ்வொருவருடைய செயல்திறனும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட செய்தி இசையினை பயன்படுத்தி, எத்தகைய செயல்களிலும் செயல்திறனை அதிகப்படுத்தி நன்மையை அதிகரிக்கலாம் என்பதை புரிய வைக்கின்றது.
இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும், இசையை பயன்படுத்தி, அதன் நன்மைகளை அடையத் துவங்கி விட்டனர் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக, மருத்துவம், விளை யாட்டு, காவல்துறை, போக்குவரத்துதுறை, வணிகம், மேலாண்மையில், கல்வி, என ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் இசையின் பயன்பாடு படர்ந்து காணப்படுகிறது.
இசையினால் சந்தோஷத்தை எப்படி பெருக்க முடியும்
இசையின் உதவியால் கீழ்கண்டவைகளில் நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தலாம்.
அ) மருத்துவத்தில் இசை
இசை மருத்துவத்தின் உதவியால் கீழ்கண்ட நன்மைகளை அடையலாம்.
1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்
2. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தலாம்
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
4. கேன்சர் போன்றநோய்களினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்
5. மன அமைதியை ஏற்படுத்தலாம்
6. மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது
7. சோக நிகழ்வுகள், துன்பங்கள் தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிய அவதாரம் எடுக்க உதவுகிறது.
8. சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. சீரான சுவாசம் சிறந்த உடல் மற்றும் மனநலத்திற்கு வழிவகை செய்கிறது.
9. உத்வேகம், உற்சாகம், பலம், தன்னம்பிக்கையை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இசை உதவுகின்றது.
10. அமைதியான நித்திரையை (தூக்கம்) வழங்குகிறது சிறந்த இசைமழை.
ஆ) கல்வியில் இசை
ஆல்பிரட் ஐன்ஸ்டின் படிப்பதற்கே தகுதி யில்லாதவர் என்று பள்ளியை விட்டு வெளி யேற்றப்பட்ட பின்பு, அவர் இசை பயிற்சிகளைப் பெற்று பியானோ இசையில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்தி புலமையுடன் ஈடுபட்டார். அவர் தன் இசையின் ஈடுபாடும், தன்னுடைய சாதனைகளுக்கு ஒரு காரணமாக கூறியிருந்தார். மட்டுமல்ல பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூட இசையுடன் கூடிய வகுப்பறைகள், மாணவர்களின் கற்கும் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், இசை அவர்களுக்கு கீழ்கண்ட விதங்களில் உதவுகிறது.
1. கவனக்குவிப்பை ஏற்படுத்த உதவுகிறது.
2. தேர்வு பயம், பதட்டம், மனஅழுத்தம், போன்றவற்றைமாற்றஉதவுகின்றது.
3. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. சோர்வை நீக்கி உற்சாகத்தை, உத்வேகத்தை வழங்குகிறது.
5. தெளிவான மனநிலையை உருவாக்க உதவுகிறது.
இ) விளையாட்டுத் துறையில்
பயிற்சியின் போது இசையைப் பயன் படுத்துவதனால், விளையாட்டு
வீரர்களின் கவனம் ஒருமுகப்படுத்தப் படுவதுடன், சோர்வு இன்றித் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈ) மேலாண்துறையில்
இன்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணிக்காத்து, எப்போதும் உற்சாக மனநிலையில் செயல்பட வைக்க இசையைப் பயன்படுத்த துவங்கியுள்ளது கண்கூடு.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இசை யினைச் சரியான முறையில் முழு மனதுடன் பயன்படுத்துவோம். உடல்நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காப்போம். செயல்திறனை அதிகரித்து சாதனைகளைக் குவிப்போம். சந்தோஷம் பொங்க வாழ்வோம்.
6. நல்லது செய்யுங்கள் : நன்மையே நடக்கும்
முல்லா தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பானையில் ரகசியமாக வெள்ளி நாணயங்களை சேமித்து வந்தார். சில தினங்கள் தாண்டி திடீரென்று முல்லா ஊரைக் கூட்டி ஒரே அழுகை அழ ஆரம்பித்தார். ஊரார் என்ன முல்லா என்ன ஆச்சு என்று கேட்ட போது, முல்லா எனக்கு இப்போது தங்க காசு தேவைப்படுகிறது. ஆகையால் நான் வெள்ளிக் காசுகள் சேமித்து வைத்திருந்த பானையில் தங்க காசுகளைத் தேடினேன். கிடைக்கவில்லை எனவே தான் அழுகை அழுகையாக வருகிறது என்று தேம்பினார்.
முல்லாவிடம் அவர் தவறை சுட்டிக் காட்ட முயன்ற ஊரார், இனி இவரை புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டனர்.
இவரைப் போன்றே நம்மில் பலர் நம் உறவு வங்கிக் கணக்கில் சந்தேகம், கோபம், பொறாமை, கெடுதல், அலட்சியம், பழி வாங்குதல், பேராசை, தர்க்கம், குதர்க்கம், கோழ்மூட்டுதல் என பல்வேறு தீமைகளை (வெள்ளி காசுகள்) வழங்கி விட்டு அன்பு, உதவி, கருணை, அனுசரணை, ஆதரவு, (தங்கக்காசு) போன்ற நன்மைகளைத் திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் வங்கியில் செலுத்தாத பணத்தை நாம் பெறமுடியாதது போன்று நம்மால் (பிறருக்கு) வழங்கப்படாத நன்மைகளை (பிறரிடம்) நாம் எதிர்பார்ப்பது எப்படி நியாயம்.
வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டுச் சாதனை சிகரத்தை அடைய வேண்டுமானால், நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்ற உண்மையே.
நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை விளையும். நாம் அன்பு வழங்கினால் நமக்கும் அன்பு கிடைக்கும். நாம் உதவி செய்தால் நமக்கும் உதவி கிடைக்கும்.
அதே போன்று நாம் தீமையைச் செய்தால், தீமையைத்தான் எதிர்பார்க்க முடியும். தீமையே திரும்பவும் வந்து சேரும்.
ஆகவே நன்மையே செய்யுங்கள், நன்மையே பேசுங்கள், நன்மையே பாருங்கள். உங்களுக்கும் நன்மையே விளையும். உங்களைச் சுற்றி உங்களுக்கு நன்மை மட்டுமே செய்பவர் கூட்டம் அதிகரிக்கும். அத்தகைய ஆதரவு கூட்டத்தின் அற்புத ஆசிகள் மற்றும் ஆதரவுடன் நீங்கள் சந்தோஷ சாதனை வாழ்வு வாழ்வது நிச்சயம்.
சந்தோஷ வழிமுறைகள் தொடரும்…
முல்லா ஏன் இந்த இரவில் தூங்காமல் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்ட போது, பொழுது புலரும் போது சூரிய வெளிச்சம் என் தூக்கத்தைத் தொந்தரவு பண்ணி விடுமோ என்றபயம் காரணமாக தான், தூங்காமலே இருந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
முல்லாவைப் போன்றபலரும் நன்மைகள் வரும்போது சந்தோஷப்படுவதற்கு பதிலாக முன்பு நடந்த தீமைகள் அல்லது வரவாய்ப்புள்ள துன்பங்களை நினைத்து இன்றைக்கு சந்தோஷம் அடையும் வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறி விடுகின்றனர்.
அன்பு நண்பர்களே சந்தோஷம் அடையும் ஒவ்வொரு வாய்ப்பையும் முழுமை யாகப் பயன்படுத்துங்கள். துன்பங்கள் வந்தாலும், தடைகள் வந்தாலும் அவமானங்கள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும், அவற்றிலிருந்தெல்லாம் என்ன படிப்பினைகள் கிடைக்கின்றன, என்ன அனுபவங்கள் கிடைக்கின்றன, எவ்வளவு தன்னம்பிக்கை கிடைக்கிறது, எவ்வளவு பலம், சமாளிக்கும் திறன், உத்வேகம் கிடைக்கிறது என்பதில் கவனம் செலுத்துங்கள் சந்தோஷம் சாத்தியம். சாதனைகள் நிச்சயம்.
நன்மைகளை எண்ணுங்கள்
நன்மையும், தீமையும், சந்தோஷமும் துக்கமும் வாழ்க்கை என்னும் நாணயத்தின் இருபக்கங்கள். இவை இரண்டும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. ஆகவே நாம் நமக்கு வரும் தீமைகளில் மட்டும் கவனம் செலுத்தி என்றும் துக்கத்துடன் வாழ்வதை விட்டுவிட்டு, நமக்குக் கிடைத்த நன்மைகளை, பலன்களை, உதவிகளை, சாதனைகளை வரிசைப்படுத்துங்கள். அவ்வப்போது தினம், தினம் அந்த நன்மைகளை நினைவு கூறுங்கள்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய இழப்பு வந்துவிட்டது என்று எண்ணுகிறீர்கள் என்றால், நீங்கள்
அ) பேரழிவுகளில் தாய், தந்தை, உறவினர் களை இழந்த குழந்தைகள் கோடிக்கணக்கில் உலகில் வாழ்கிறார்கள். அவர்களை எண்ணிப்பாருங்கள்.
ஆ) ஒரு நேரம் கூட உணவு கிடைக்காமல் பட்டினியால் உலகம் முழுவதும் தினம் தினம் இறந்துபோகின்றனர் பலர். அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு மேல்.
இ) இரண்டு கால்கள், இரண்டு கைகள் இல்லாமல் சிறப்பாக சாதித்து கொண்டு இருக்கும் நிக்விஜீனிக் போன்றவர்களோடு தொடர்பு படுத்தி பார்க்கும் போது உங்கள் நிலை எவ்வளவு மேல் என எண்ணிப் பாருங்கள்.
இதுவரை கிடைத்த அனைத்து நன்மைகள், ஆசிர்வாதங்கள்,
சாதனைகள், வரிசைப்படுத்தி மீண்டும் மீண்டும் திருப்பிப் பாருங்கள். உங்களுக்கே உங்கள் மேல் நம்பிக்கை ஏற்படும். அந்த நம்பிக்கை நம் தன்னம்பிக்கை, தன்மதிப்பு, தன்முனைப்பு ஆகியவற்றை அதிகப்படுத்தும். இந்த நிலை நமக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும். அந்த மகிழ்ச்சி மனநிலை நம் செயல்திறனை மேலும் அதிகப் படுத்தும். சாதனைகள் சாத்தியமாகும்.
5. இசையை ரசியுங்கள்
இங்கிலாந்து காவல்துறைலண்டன் மாநகர சுரங்க ரயில்
நிலையங்களில் இசையை ஒலிபரப்ப ஆரம்பித்த பின்பு, அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, அதுவரையிலும் நடைபெற்று வந்த வழிப்பறி, பிக்பாக்கெட்டுகள் 33% குறைந்து விட்டது. பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் நிகழ்வுகள் 25% குறைந்து விட்டது. சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் 37% குறைந்துவிட்டது.
இதனால் அரசுதுறைகள், அனைத்திற்கும் நிம்மதி, பொதுமக்களுக்கு சந்தோஷம்.
சுரங்க ரயில்நிலையங்களில் செய லாற்றும், பயன்படுத்தும் ஒவ்வொருவருடைய செயல்திறனும் அதிகரிக்கின்றது.
மேற்கண்ட செய்தி இசையினை பயன்படுத்தி, எத்தகைய செயல்களிலும் செயல்திறனை அதிகப்படுத்தி நன்மையை அதிகரிக்கலாம் என்பதை புரிய வைக்கின்றது.
இன்று ஏறக்குறைய அனைத்து துறைகளிலும், இசையை பயன்படுத்தி, அதன் நன்மைகளை அடையத் துவங்கி விட்டனர் என்று சொல்லலாம்.
எடுத்துக்காட்டாக, மருத்துவம், விளை யாட்டு, காவல்துறை, போக்குவரத்துதுறை, வணிகம், மேலாண்மையில், கல்வி, என ஏறக்குறைய அனைத்து துறைகளிலும் இசையின் பயன்பாடு படர்ந்து காணப்படுகிறது.
இசையினால் சந்தோஷத்தை எப்படி பெருக்க முடியும்
இசையின் உதவியால் கீழ்கண்டவைகளில் நம் மகிழ்ச்சியை அதிகப்படுத்தலாம்.
அ) மருத்துவத்தில் இசை
இசை மருத்துவத்தின் உதவியால் கீழ்கண்ட நன்மைகளை அடையலாம்.
1. இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்
2. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தலாம்
3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
4. கேன்சர் போன்றநோய்களினால் ஏற்படும் வலியைக் குறைக்கலாம்
5. மன அமைதியை ஏற்படுத்தலாம்
6. மனதை ஒருமுகப்படுத்த உதவுகிறது
7. சோக நிகழ்வுகள், துன்பங்கள் தோல்விகளை மறந்து புத்துணர்ச்சியுடன் புதிய அவதாரம் எடுக்க உதவுகிறது.
8. சீரான சுவாசத்திற்கு வழிவகுக்கிறது. சீரான சுவாசம் சிறந்த உடல் மற்றும் மனநலத்திற்கு வழிவகை செய்கிறது.
9. உத்வேகம், உற்சாகம், பலம், தன்னம்பிக்கையை மற்றும் செயல்திறனை அதிகரிக்க இசை உதவுகின்றது.
10. அமைதியான நித்திரையை (தூக்கம்) வழங்குகிறது சிறந்த இசைமழை.
ஆ) கல்வியில் இசை
ஆல்பிரட் ஐன்ஸ்டின் படிப்பதற்கே தகுதி யில்லாதவர் என்று பள்ளியை விட்டு வெளி யேற்றப்பட்ட பின்பு, அவர் இசை பயிற்சிகளைப் பெற்று பியானோ இசையில் தன்னை முழுமை யாக ஈடுபடுத்தி புலமையுடன் ஈடுபட்டார். அவர் தன் இசையின் ஈடுபாடும், தன்னுடைய சாதனைகளுக்கு ஒரு காரணமாக கூறியிருந்தார். மட்டுமல்ல பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் கூட இசையுடன் கூடிய வகுப்பறைகள், மாணவர்களின் கற்கும் திறனையும், ஆர்வத்தையும் அதிகரிப்பதாகக் கூறுகின்றது.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கும் வகையில், இசை அவர்களுக்கு கீழ்கண்ட விதங்களில் உதவுகிறது.
1. கவனக்குவிப்பை ஏற்படுத்த உதவுகிறது.
2. தேர்வு பயம், பதட்டம், மனஅழுத்தம், போன்றவற்றைமாற்றஉதவுகின்றது.
3. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
4. சோர்வை நீக்கி உற்சாகத்தை, உத்வேகத்தை வழங்குகிறது.
5. தெளிவான மனநிலையை உருவாக்க உதவுகிறது.
இ) விளையாட்டுத் துறையில்
பயிற்சியின் போது இசையைப் பயன் படுத்துவதனால், விளையாட்டு
வீரர்களின் கவனம் ஒருமுகப்படுத்தப் படுவதுடன், சோர்வு இன்றித் தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுவதாக ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஈ) மேலாண்துறையில்
இன்று பல்வேறு நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தைப் பேணிக்காத்து, எப்போதும் உற்சாக மனநிலையில் செயல்பட வைக்க இசையைப் பயன்படுத்த துவங்கியுள்ளது கண்கூடு.
இவ்வளவு சிறப்புகள் கொண்ட இசை யினைச் சரியான முறையில் முழு மனதுடன் பயன்படுத்துவோம். உடல்நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காப்போம். செயல்திறனை அதிகரித்து சாதனைகளைக் குவிப்போம். சந்தோஷம் பொங்க வாழ்வோம்.
6. நல்லது செய்யுங்கள் : நன்மையே நடக்கும்
முல்லா தன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பானையில் ரகசியமாக வெள்ளி நாணயங்களை சேமித்து வந்தார். சில தினங்கள் தாண்டி திடீரென்று முல்லா ஊரைக் கூட்டி ஒரே அழுகை அழ ஆரம்பித்தார். ஊரார் என்ன முல்லா என்ன ஆச்சு என்று கேட்ட போது, முல்லா எனக்கு இப்போது தங்க காசு தேவைப்படுகிறது. ஆகையால் நான் வெள்ளிக் காசுகள் சேமித்து வைத்திருந்த பானையில் தங்க காசுகளைத் தேடினேன். கிடைக்கவில்லை எனவே தான் அழுகை அழுகையாக வருகிறது என்று தேம்பினார்.
முல்லாவிடம் அவர் தவறை சுட்டிக் காட்ட முயன்ற ஊரார், இனி இவரை புரியவைக்க முடியாது என்பதை உணர்ந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டனர்.
இவரைப் போன்றே நம்மில் பலர் நம் உறவு வங்கிக் கணக்கில் சந்தேகம், கோபம், பொறாமை, கெடுதல், அலட்சியம், பழி வாங்குதல், பேராசை, தர்க்கம், குதர்க்கம், கோழ்மூட்டுதல் என பல்வேறு தீமைகளை (வெள்ளி காசுகள்) வழங்கி விட்டு அன்பு, உதவி, கருணை, அனுசரணை, ஆதரவு, (தங்கக்காசு) போன்ற நன்மைகளைத் திரும்பத் தருவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் வங்கியில் செலுத்தாத பணத்தை நாம் பெறமுடியாதது போன்று நம்மால் (பிறருக்கு) வழங்கப்படாத நன்மைகளை (பிறரிடம்) நாம் எதிர்பார்ப்பது எப்படி நியாயம்.
வெற்றிப் பாதையில் வீறுநடைபோட்டுச் சாதனை சிகரத்தை அடைய வேண்டுமானால், நாம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய ஒன்று, நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர் செயல் உண்டு என்ற உண்மையே.
நாம் நன்மை செய்தால் நமக்கு நன்மை விளையும். நாம் அன்பு வழங்கினால் நமக்கும் அன்பு கிடைக்கும். நாம் உதவி செய்தால் நமக்கும் உதவி கிடைக்கும்.
அதே போன்று நாம் தீமையைச் செய்தால், தீமையைத்தான் எதிர்பார்க்க முடியும். தீமையே திரும்பவும் வந்து சேரும்.
ஆகவே நன்மையே செய்யுங்கள், நன்மையே பேசுங்கள், நன்மையே பாருங்கள். உங்களுக்கும் நன்மையே விளையும். உங்களைச் சுற்றி உங்களுக்கு நன்மை மட்டுமே செய்பவர் கூட்டம் அதிகரிக்கும். அத்தகைய ஆதரவு கூட்டத்தின் அற்புத ஆசிகள் மற்றும் ஆதரவுடன் நீங்கள் சந்தோஷ சாதனை வாழ்வு வாழ்வது நிச்சயம்.
சந்தோஷ வழிமுறைகள் தொடரும்…
சனி, 14 பிப்ரவரி, 2009
குழைந்தைகள் புத்திசாலிகள்
குழந்தைகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் அப்பாக்களுக்கு இனி கவலையில்லை. உங்கள் குழந்தைகளின் கேள்விகளுக்கு உடனுக்குடன் நீங்கள் பதில் சொல்வதற்காகவே புத்தகம் ஒன்று வந்துள்ளது. வீட்டில் இருக்கும் போது குழந்தைகள் நம்மிடம் வந்து அப்பா, உன்னுடைய தலையில் எத்தனை முடி உள்ளது என்றோ, எதற்கு நமக்கு புருவங்கள் தேவை என்றோ, வானம் ஏன் நீலநிறமாக இருக்கின்றது என்பது போன்றோ கேள்விகளைக் கேட்கும் போது எவ்வளவு படித்த அப்பாக்களும் சற்று தடுமாறித்தான் போகின்றனர்.இப்படித்தான் லண்டனைச் சேர்ந்த வென்டெல் ஜெமிசென்னுடைய இளைய மகன் கேட்ட வினாக்களுக்கு விடை சொல்லத் தெரியாமல் நம்ம ஊர் அப்பாக்களைப் போல முழித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இப்பிரச்சனைக்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்பதில் வென்டெல் ஜெமிசென் களம் இறங்கினார். அதன் விளைவுதான் அப்பாக்களுக்குத் தெரிஞ்சது கொஞ்சம் - என்ற புத்தகம். இதற்காக அவர் உயிரினங்கள் தோற்றம், மருத்துவம், பழங்கால வரலாறு தொடங்கி வானிலைத் தொடர்பான அடிப்படையான கேள்விகளுக்குத் சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்று அதனை ஒர் புத்தகமாக தொகுத்துள்ளார்.பொதுவாக குழந்தைகள் கேட்கும் இரண்டு கேள்விகளான எனது தலையில் எத்தனை முடி உள்ளது என்பதும், வானம் ஏன் நீலநிறமாக உள்ளது என்பதும் தான். குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் தலையில் ஒரு லட்சம் முடிகள் இருக்கும் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர். அதேநேரத்தில் சிவப்பு நிற தலைக்கொண்டவர்கள் தலையில் உள்ள முடி சற்று கனமாக இருப்பதால் எண்ணிக்கைக் சற்று குறைவாக இருக்கும் என்றும் அதில் கூறியுள்ளனர்.வளிமண்டலத்தில் உள்ள காற்றின் மூலக்கூறுகள் தான் வானம் நீலமாக தோன்றக் காரணமாகும். அதிக அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகள் வழியாக பயணிக்கின்றன. குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள் காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகின்றன. எனவே எப்போதெல்லாம் காற்று மூலக்கூறுகளை நீல நிற குறு அலைவரிசைகள் தொடுகின்றனவோ அப்போதெல்லாம் அவை வான்வெளி முழுவதும் சிதறடிக்கப்படுகின்றன. எனவே தான் வானம் எப்போதும் நீலநிறமாக காணப்படுகிறது.குளிக்கும் போது நம்முடைய உள்ளங்கை, பாதம் ஆகிய பகுதிகளில் ஏன் ஒருவிதமான சுருக்கம் ஏற்படுகிறது என்பது மற்றொரு கேள்வி, குளிக்கும் போது நம் உடலில் உள்ள மேல்தோல், தோலினுள் நீர் உட்புகாமல் இருப்பதற்காக எண்ணெய் போன்ற வழவழப்பான செபும் என்ற திரவத்தை உமிழ்கிறது. இது சிறிது நேரம் வரையிலும் தோலில் நீர் உட்புகாதவாறு பார்த்துக் கொள்கிறது. நீண்டநேரம் தண்ணீரில் இருக்கும் நிலையில் செபும் கரைந்து நீர் தோலுக்குள் உட்புகத் தொடங்குகிறது. இதனால் வெளிப்புறத்தோல் விரிவடையத் தொடங்கும். அப்போது அதன் கீழ் பகுதியில் உள்ள திசுக்கள், மேற்புறத் தோலின் விரிவுக்கு தகுந்தவாறு சுருங்குவதால் அவ்வாறு ஏற்படுகிறது.வாகனங்களை நிறுத்த ஏன் சிவப்பு நிற விளக்குகளை பயன்படுத்துகின்றார்கள் என்று கேட்டால் இனி தாராளமாக நீங்கள் இவ்வாறு பதில் சொல்லலாம், 19 -நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்காட்டிஸ் பொறியியல் வல்லுநர் ராபர்ட் ஸ்டிவன்சன் அப்போது கலங்கரை விளக்கம் அமைக்க வெண்மை நிறத்துக்கு பதிலாக வேறு ஒருநிறத்தை தேர்வு செய்வதில் ஈடுபட்டிருந்தார். அந்த காலத்தில் சிவப்பு நிறக் கண்ணாடிகள் தான் இருந்துள்ளது. மேலும் எவ்வளவு தொலைவில் இருந்து பார்த்தாலும் சிவப்பு நிறத்தைக் காணமுடியும் என்று கூறியுள்ளனர். அதிலிருந்து கடல் போக்குவரத்தில் சிக்னலாக பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிறம், தொடர்ந்து இரயில்கள், சாலைப் போக்குவரத்தில் வாகனங்களை நிறுத்தவும் பயன்படத் தொடங்கியது.நமக்கு ஏன் புருவங்கள் உள்ளன என்பது தான் அடுத்த கேள்வி. இதற்கு, சமூகமாக வாழும் மனிதன், மற்றொரு மனிதனின் உணர்வுகளை அவனுடைய முகத்தின் மூலம் எளிதில் தெரிந்து கொள்கிறான். முகவெளிப்பாடுகளை ஒருங்கிணைக்கும் முக்கியமான பணியைத் தான் புருவங்கள் மேற்கொள்கின்றன என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.இதுபோன்ற, குழந்தைகள் நம்மிடம் கேட்கும் ஏராளமான, நம்மைச் சுற்றி அன்றாடம் நடக்கும் ஆயிரமாயிரம் விஷயங்களைப் பற்றிய கேள்விகளுக்கான விடைகளைத் தொகுத்து வந்துள்ள புத்தகம் தான் அப்பாக்களுக்கு தெரிஞ்சது கொஞ்சம். கேள்வி கேட்கும் குழந்தைகளைத் திட்டாமல், பதில் சொல்லத் தயாராவதே அப்பாக்களின் புத்திசாலித்தனமாகும் என்கிறார் அந்த புத்தகத்தின் ஆசிரியரான வென்டெல் ஜெமிசென்.
திங்கள், 9 பிப்ரவரி, 2009
அந்த சிடிக்களை
வெளிநாட்டில் கணவன்... விபரீதமாய் மனைவி*
எனது நெருங்கிய நண்பன் அரபு நாட்டில் வேலை பார்க்கிறான். அவனுடைய இளவயது மனைவி சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ஊர்த் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தவன், தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு, சில ஆபாச சிடிக் களையும் வாங்கி வந்துள்ளான். வீட்டில் தனியாக கணவன், மனைவி இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
லீவு நாட்கள் முடிந்ததும் நண்பன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வீட்டில் தனியாக இருந்த நண் பரின் மனைவி அந்த சிடிக்களை டிவியில் போட்டு ரசித்துக் கொண்டிருக்கும்போது, உறவினர் எதார்த்தமாக வீட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
டிவியை ஆபாசக் காட்சி ஓடிக் கொண்டிருக்க... திட்டி விட்டு திரும்பி சென்றுவிட்டனர். மேலும் நடத்தை கெட்டவள் என்று அனைத்து உற வினர்களிடமும் கூறிவிட்டனர். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவளை தாய் வீட்டிற்கே அனுப்பி விட்டனர். எனது நண்பனோ தான் சிடி கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டால் தனது மரியாதை கெட்டுவிடும் என்று அமைதி யாக இருந்து விட்டான்.
இதனால் மனமுடைந்த நண்பரின் மனைவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தோழிகளே உணர்ச்சிகளை சற்று நேரம் கட்டுப் படுத்தி உஷாராக இருங்கள். நண்பர்களே உங்கள் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்.
- ஆர். கரிகாலன், திருச்சி.
*** * பதறவைத்த பஸ் பயணம்*
எங்கள் ஊருக்கு செல்வதற்காக நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தேன். மூன்று குழந்தைகளோடு சூட்கேஸ், பேக் போன்ற சுமைகளோடு ஒரு பெண்மணி பஸ்சுக் குள் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு குழந்தை பாத்ரூம் போகவேண்டுமென்று அழுதது.
பஸ்சில் மற்ற இரு குழந்தைகளையும், சுமை களையும் பஸ்சில் விட்டுவிட்டு குழந்தையை பாத்ரூமுக்கு அழைத்து சென்றார். போன சில நிமிடங்களில் பஸ்சில் ஏறிய டிரைவர் பேருந்தை கிளப்ப, மற்ற இரு குழந்தைகளும் அழுதன.
உடனே இருவரையும் இறக்கிவிட்டு, சுமை களோடு வண்டியை கிளப்பிவிட்டார் டிரைவர். திரும்பி வந்த அந்த பெண்மணி, சுமைகள் பஸ்சிலேயே சென்று விட்டன என்று கத் தினார். ஊருக்கு செல்வதற்கு கூட பண மில்லையே என்று வருந்தினார். உடனே நான் அந்த பெண்மணியை பேருந்து மேலாளரிடம் அழைத்துச் சென்றேன்.
அவரிடம் நடந்தை விளக்க, அவர் செல்போன் மூலம் பஸ் டிரைவரிடம், ``பேருந்தில் இருக் கும் சுமைகளை பத்திரமாக வைத்திருங்கள். பின்னால் வரும் பஸ்சில் சம்பந்தப்பட்ட பய ணியை அனுப்பி வைக்கிறேன்`` என்று கூறினார்.
பின்னர் பத்திரமாக அவர்கள் அடுத்த பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே பேருந் தில் செல்லும்போது நேரம் தவறாமல் கவனத்துடன் செல்லுங்கள். இல்லை என்றால் இப்படி கஷ்டப்பட வேண்டியதுதான்.
- எஸ்.சதீஷ்குமார், கொல்லங்குளம்.
*** * சேவை இங்கு தேவை*
எனது உறவினர் ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தோம். அதே வார்டில் பல பேர் இருந்தனர். அந்த நேரம் மருத்துவர் நோயாளியை சந்திக்கும் நேரம். அதனால் பார்வையாளர்கள் அனைவரும் வெளியே காத்திருந்தோம்.
அங்கு சிகிச்சை பெறும் ஒரு முதியவர் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு சிறுநீர் கழிக்கும் அவசியம் நேரிட்டது. உடனே அவர் செவிலியரை அழைத்தார். ஆனால் அவர்களோ முதியவருக்கு உதவாமல் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந் தனர்.
அந்த முதியவர் எழவே முடியாமல் கையை அசைத்து அசைத்து அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் சென்றபிறகு வேண்டா வெறுப்பாக உதவ சென்றனர்.
அதற்குள் அவர் சிறுநீரை அடக்க முடியாமல் சிறிது வெளியேறி விட்டது. இதனால் அந்த முதியவர் பதட்டமாகி விட்டார். உலகிலேயே சிறந்த சேவை நோயாளிகளுக்கு உதவுவது. செவி லியர்கள்அதை சிறப்புடன் செய்ய வேண்டும்.
- ஏ.ரெஜினா, தஞ்சாவூர்.
***
*பெற்றோருக்கு குழந்தை... மற்றவர்களுக்கு `குமரி '*
என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒரு பெண் வயது 12. ஆனால் அவளின் உடல் வளர்ச்சியோ பதினைந்து வயது பெண்ணாக காட்டியது. மேலும் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தாள். இதைக் கண்டு எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு அந்த நேரத்தில் ஒரு வயதான ஆண் வந்திருந்தார். அவர் அந்த குழந்தையை பார்த்த விதமும், நடந்துகொண்ட விதமும் சரியாக இல்லை.
இதனால் மனதுக்குள் வருத்தமடைந்த நான், அந்த குழந் தையை லாவகமாக அவரிடம் இருந்து பிரித்து, எனக்கு அருகில் உட்கார வைத்தேன்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். அவர்களின் உடல் வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளது. பெற்றோர்களின் கண்களுக்கு அவர்கள் குழந்தையாக தெரிந்தாலும், மற்ற வர்களின் கண்களுக்கு குழந்தைகளாக தெரிவதில்லை என்பதே கசப்பான உண்மை!
எனவே குழந்தைகளின் பெற்றோர், எப்போதுமே தங்களின் குழந்தைகளுக்கு `நாகரீகமான` ஆடைகளை அணிவித்து அழகு பாருங்கள். அதுதான் உங்கள் குழந்தைகளுக்கு அழ கானது.... பாதுகாப்பானது! பின்னாளில் அவர்கள் வளர்ந்தாலும், இந்த மாதிரியான உடை களையே அவர்கள் அணியும் பழக்கம் வந்துவிடும். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது!
- மு.அம்மு, நெல்லை.
எனது நெருங்கிய நண்பன் அரபு நாட்டில் வேலை பார்க்கிறான். அவனுடைய இளவயது மனைவி சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். ஊர்த் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தவன், தனது மனைவியையும் அழைத்துக் கொண்டு, சில ஆபாச சிடிக் களையும் வாங்கி வந்துள்ளான். வீட்டில் தனியாக கணவன், மனைவி இருவரும் பார்த்து ரசித்துள்ளனர்.
லீவு நாட்கள் முடிந்ததும் நண்பன் வெளிநாட்டிற்கு சென்று விட்டான். வீட்டில் தனியாக இருந்த நண் பரின் மனைவி அந்த சிடிக்களை டிவியில் போட்டு ரசித்துக் கொண்டிருக்கும்போது, உறவினர் எதார்த்தமாக வீட்டுக்குள் நுழைந்து விட்டனர்.
டிவியை ஆபாசக் காட்சி ஓடிக் கொண்டிருக்க... திட்டி விட்டு திரும்பி சென்றுவிட்டனர். மேலும் நடத்தை கெட்டவள் என்று அனைத்து உற வினர்களிடமும் கூறிவிட்டனர். உறவினர்கள் அனைவரும் சேர்ந்து அவளை தாய் வீட்டிற்கே அனுப்பி விட்டனர். எனது நண்பனோ தான் சிடி கொண்டு வந்ததை ஒப்புக் கொண்டால் தனது மரியாதை கெட்டுவிடும் என்று அமைதி யாக இருந்து விட்டான்.
இதனால் மனமுடைந்த நண்பரின் மனைவி தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தோழிகளே உணர்ச்சிகளை சற்று நேரம் கட்டுப் படுத்தி உஷாராக இருங்கள். நண்பர்களே உங்கள் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லாதீர்கள்.
- ஆர். கரிகாலன், திருச்சி.
*** * பதறவைத்த பஸ் பயணம்*
எங்கள் ஊருக்கு செல்வதற்காக நான் பேருந்து நிலையத்தில் அமர்ந்து இருந்தேன். மூன்று குழந்தைகளோடு சூட்கேஸ், பேக் போன்ற சுமைகளோடு ஒரு பெண்மணி பஸ்சுக் குள் உட்கார்ந்திருந்தார். சிறிது நேரத்தில் ஒரு குழந்தை பாத்ரூம் போகவேண்டுமென்று அழுதது.
பஸ்சில் மற்ற இரு குழந்தைகளையும், சுமை களையும் பஸ்சில் விட்டுவிட்டு குழந்தையை பாத்ரூமுக்கு அழைத்து சென்றார். போன சில நிமிடங்களில் பஸ்சில் ஏறிய டிரைவர் பேருந்தை கிளப்ப, மற்ற இரு குழந்தைகளும் அழுதன.
உடனே இருவரையும் இறக்கிவிட்டு, சுமை களோடு வண்டியை கிளப்பிவிட்டார் டிரைவர். திரும்பி வந்த அந்த பெண்மணி, சுமைகள் பஸ்சிலேயே சென்று விட்டன என்று கத் தினார். ஊருக்கு செல்வதற்கு கூட பண மில்லையே என்று வருந்தினார். உடனே நான் அந்த பெண்மணியை பேருந்து மேலாளரிடம் அழைத்துச் சென்றேன்.
அவரிடம் நடந்தை விளக்க, அவர் செல்போன் மூலம் பஸ் டிரைவரிடம், ``பேருந்தில் இருக் கும் சுமைகளை பத்திரமாக வைத்திருங்கள். பின்னால் வரும் பஸ்சில் சம்பந்தப்பட்ட பய ணியை அனுப்பி வைக்கிறேன்`` என்று கூறினார்.
பின்னர் பத்திரமாக அவர்கள் அடுத்த பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். எனவே பேருந் தில் செல்லும்போது நேரம் தவறாமல் கவனத்துடன் செல்லுங்கள். இல்லை என்றால் இப்படி கஷ்டப்பட வேண்டியதுதான்.
- எஸ்.சதீஷ்குமார், கொல்லங்குளம்.
*** * சேவை இங்கு தேவை*
எனது உறவினர் ஒருவருக்கு இருதய வலி ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்தோம். அதே வார்டில் பல பேர் இருந்தனர். அந்த நேரம் மருத்துவர் நோயாளியை சந்திக்கும் நேரம். அதனால் பார்வையாளர்கள் அனைவரும் வெளியே காத்திருந்தோம்.
அங்கு சிகிச்சை பெறும் ஒரு முதியவர் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு சிறுநீர் கழிக்கும் அவசியம் நேரிட்டது. உடனே அவர் செவிலியரை அழைத்தார். ஆனால் அவர்களோ முதியவருக்கு உதவாமல் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந் தனர்.
அந்த முதியவர் எழவே முடியாமல் கையை அசைத்து அசைத்து அழைத்துக் கொண்டிருந்தார். கொஞ்ச நேரம் சென்றபிறகு வேண்டா வெறுப்பாக உதவ சென்றனர்.
அதற்குள் அவர் சிறுநீரை அடக்க முடியாமல் சிறிது வெளியேறி விட்டது. இதனால் அந்த முதியவர் பதட்டமாகி விட்டார். உலகிலேயே சிறந்த சேவை நோயாளிகளுக்கு உதவுவது. செவி லியர்கள்அதை சிறப்புடன் செய்ய வேண்டும்.
- ஏ.ரெஜினா, தஞ்சாவூர்.
***
*பெற்றோருக்கு குழந்தை... மற்றவர்களுக்கு `குமரி '*
என்னுடைய நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அவருக்கு ஒரு பெண் வயது 12. ஆனால் அவளின் உடல் வளர்ச்சியோ பதினைந்து வயது பெண்ணாக காட்டியது. மேலும் உடலோடு ஒட்டிய ஆடையை அணிந்திருந்தாள். இதைக் கண்டு எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது.
அவர்கள் வீட்டிற்கு அந்த நேரத்தில் ஒரு வயதான ஆண் வந்திருந்தார். அவர் அந்த குழந்தையை பார்த்த விதமும், நடந்துகொண்ட விதமும் சரியாக இல்லை.
இதனால் மனதுக்குள் வருத்தமடைந்த நான், அந்த குழந் தையை லாவகமாக அவரிடம் இருந்து பிரித்து, எனக்கு அருகில் உட்கார வைத்தேன்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சிறுவயதிலேயே பருவம் அடைந்து விடுகிறார்கள். அவர்களின் உடல் வளர்ச்சியும் அபரிமிதமாக உள்ளது. பெற்றோர்களின் கண்களுக்கு அவர்கள் குழந்தையாக தெரிந்தாலும், மற்ற வர்களின் கண்களுக்கு குழந்தைகளாக தெரிவதில்லை என்பதே கசப்பான உண்மை!
எனவே குழந்தைகளின் பெற்றோர், எப்போதுமே தங்களின் குழந்தைகளுக்கு `நாகரீகமான` ஆடைகளை அணிவித்து அழகு பாருங்கள். அதுதான் உங்கள் குழந்தைகளுக்கு அழ கானது.... பாதுகாப்பானது! பின்னாளில் அவர்கள் வளர்ந்தாலும், இந்த மாதிரியான உடை களையே அவர்கள் அணியும் பழக்கம் வந்துவிடும். எந்தப் பிரச்சினையும் ஏற்படாது!
- மு.அம்மு, நெல்லை.
சின்ன வயசில்
சரி, தவறு என்று இதில் ஒன்றும் இல்லை. அனால் எந்த நிகழ்வுகளின் மூலமும் ஒரு பாடம் கற்றுக்கொள்ளச் செய்யலாமே.
சிலர் தோல்வியைக் கண்டு துவண்டுவிடும் மனப்பன்மையை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள். வாலிப வயதில், முதிர்ந்த வயதில் முதன் முதலாக தோல்வியைச் சந்தித்தால் அவர்கள் எதிர்காலம் மிக வீணாகி விடும்.
சிறு வயதில் வெற்றி தோல்விகளை அந்தந்த பக்குவத்தில் எடுத்துக்கொள்ள பழக்கினால் அவர்களது எதிகாலம் அவர்கள் கையிலிருக்கும்.
இது என் சொந்த கருத்துதான். மறுக்கவோ ஏற்காமல் இருக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அன்புடன் குமார்(சிங்கை)
----- Original Message ---- From: அன்பு குயில்...@gmail.com> To: muththamiz@googlegroups.com Sent: Monday, May 7, 2007 6:21:46 PM Subject: [muththamiz] Re: AirTel Super Singer
வாழ்க்கை முழுதும் தோல்வியைதானே பார்கிறான் மனிதன் சின்ன குழந்தையாக இருக்கும் போது அது தேவையா விளையாட்டா தொலைக்காட்சீயில் பாடினோம் வந்தோம்னு இருந்தா ஜாலி
On 5/7/07, KAMAL RAJAN...@gmail.com> wrote: அது எப்படிங்க.. தோல்வி மனிதனுக்கு தேவை.. மிக மிக தேவை.. தோல்வியின் வலி தெரியாமல் இருந்தால் வெற்றியின் அருமை தெரியாமல் போய்விடும்.. உங்கள் கன்ணோட்டமே வித்தியாசமாக உள்ளது.. இந்த நிகழ்ச்சியின் மூலம் பல குழந்தைகளின் திறமை வெளி வருகிறது.. மற்றும் தோல்வி அடைந்த குழந்தைகளுக்கு தங்கள் தவறை திருத்தி கொள்ள ஒரு சந்தர்ப்பம்.. அடுத்த நிகழ்ச்சி நடத்தாமலா போக போகிறார்கள்?? அதில் தவரை திருத்தி வெற்றி கனியை ருசிக்கலாமே!!
இந்த விஷயத்தில் பெற்றோரைஉம் சொல்லலாம்.. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க சொல்கிறார்களே ஒழிய தவறோ,தோல்வியோ நேர்ந்தால் எப்படி எதிர் கொள்வது என்று கூறுவது இல்லை.. பிள்ளைப்பாசம் என்றாலும் பின்னால் இந்த விஷயம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் நிறைய விஷயத்திற்கு உபயோகப்படும்..
நானும் என் குழந்தையை இப்படிதான் வளர்க்கலாம் என்று இருக்கிறேன்..
On 5/7/07, அன்பு குயில் < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> wrote: //என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((//
உண்மைதான் சிவா உங்க மனநிலைதான் எனக்கும்
On 5/7/07, K.R Kumar...@yahoo.com > wrote: அன்புள்ள சிவசங்கர் ஐயா,
உங்கள் கருத்து கொஞ்சம் இடிக்கிறது.
தோல்வியுற்ற சிறு குழந்தைகள், சிறுவர்கள் அழும்போது நம் மனம் கலங்குவது உண்மைதான்.
இன்னுமொரு கண்ணோட்டத்தில் நோக்கலாமே. இதை ஒரு படிப்பினையாகக் , நாளைய வெற்றியின் முதல் படியாகக் கொள்ளலாமே !.
சொல்வது சுலபம், செய்வது கடினம் தான். இருந்தாலும் போட்டிகளில் அதை சீரணித்து அடுத்த முறை மேலும் நன்றாகச் செய்யும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
போட்டி என்று வந்துவிட்டால் கட்டாயம் வெற்றி-தோல்வி என்பது இருக்கும். நடுவர்களூக்கு என்னதான் criteria கொடுத்திருந்தாலும் அவர்களுடைய மன ஓட்டமும் போட்டியாளர்களின் வெற்றி-தோல்வியை நிச்சயிக்கும்.
ஆகவே நான் வெற்றி பெறாதது(தோற்றது என்று கூறுவதைத் தவிர்க்கிறேன்) எனது திறமைக் குறைவினால் அல்ல, மற்றும் பல காரணங்களால் என்று அந்தக் குழந்தைகள் உணர்ந்தால் விரைவில் தோல்வியின் அதிர்சியிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கி நடை போடுவார்கள்.
இதற்கான பொறுப்பு பெற்றோர்களிடத்திலும் போட்டி நடத்துபவர்களிடத்தலும் தான் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் எல்லா வயதினர்க்கும் பலவிதமான போட்டிகளை நடத்திய அனுபவத்தில் தோன்றிய கருத்து.
அன்புடன், குமார்(சிங்கை)
----- Original Message ---- From: Siva Sankar < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> To: muththamiz@googlegroups.com Cc: பிரியமுடன்..iTamizhFriends <> Sent: Monday, May 7, 2007 3:12:01 PM Subject: [muththamiz] Re: AirTel Super Singer
என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((
On 5/7/07, ஷாரா...@gmail.com > wrote: விஜய் டி.வி.யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர் குட்டி பிள்ளைகளுக்கான பாட்டு போட்டி... அந்த சின்ன வயசில் பிஞ்சு குழந்தைகள் தோல்வி தாங்காமல் அழுதா, மனம் உடைந்து வெளியேறுவதை பார்க்க முடிகிறதா... இவ்வளவு டென்ஷனை போட்டியின் நடுவர்கள் எப்படி சாமளிக்கிறார்கள்... நடுவராக இருக்கும் சித்ரா, உஷா உத்தப்பிடம் பேசினோம்...
சிலர் தோல்வியைக் கண்டு துவண்டுவிடும் மனப்பன்மையை இயல்பாகவே பெற்றிருக்கிறார்கள். வாலிப வயதில், முதிர்ந்த வயதில் முதன் முதலாக தோல்வியைச் சந்தித்தால் அவர்கள் எதிர்காலம் மிக வீணாகி விடும்.
சிறு வயதில் வெற்றி தோல்விகளை அந்தந்த பக்குவத்தில் எடுத்துக்கொள்ள பழக்கினால் அவர்களது எதிகாலம் அவர்கள் கையிலிருக்கும்.
இது என் சொந்த கருத்துதான். மறுக்கவோ ஏற்காமல் இருக்கவோ ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு.
அன்புடன் குமார்(சிங்கை)
----- Original Message ---- From: அன்பு குயில்
வாழ்க்கை முழுதும் தோல்வியைதானே பார்கிறான் மனிதன் சின்ன குழந்தையாக இருக்கும் போது அது தேவையா விளையாட்டா தொலைக்காட்சீயில் பாடினோம் வந்தோம்னு இருந்தா ஜாலி
On 5/7/07, KAMAL RAJAN
இந்த விஷயத்தில் பெற்றோரைஉம் சொல்லலாம்.. குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்க சொல்கிறார்களே ஒழிய தவறோ,தோல்வியோ நேர்ந்தால் எப்படி எதிர் கொள்வது என்று கூறுவது இல்லை.. பிள்ளைப்பாசம் என்றாலும் பின்னால் இந்த விஷயம் குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் நிறைய விஷயத்திற்கு உபயோகப்படும்..
நானும் என் குழந்தையை இப்படிதான் வளர்க்கலாம் என்று இருக்கிறேன்..
On 5/7/07, அன்பு குயில் < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> wrote: //என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((//
உண்மைதான் சிவா உங்க மனநிலைதான் எனக்கும்
On 5/7/07, K.R Kumar
உங்கள் கருத்து கொஞ்சம் இடிக்கிறது.
தோல்வியுற்ற சிறு குழந்தைகள், சிறுவர்கள் அழும்போது நம் மனம் கலங்குவது உண்மைதான்.
இன்னுமொரு கண்ணோட்டத்தில் நோக்கலாமே. இதை ஒரு படிப்பினையாகக் , நாளைய வெற்றியின் முதல் படியாகக் கொள்ளலாமே !.
சொல்வது சுலபம், செய்வது கடினம் தான். இருந்தாலும் போட்டிகளில் அதை சீரணித்து அடுத்த முறை மேலும் நன்றாகச் செய்யும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
போட்டி என்று வந்துவிட்டால் கட்டாயம் வெற்றி-தோல்வி என்பது இருக்கும். நடுவர்களூக்கு என்னதான் criteria கொடுத்திருந்தாலும் அவர்களுடைய மன ஓட்டமும் போட்டியாளர்களின் வெற்றி-தோல்வியை நிச்சயிக்கும்.
ஆகவே நான் வெற்றி பெறாதது(தோற்றது என்று கூறுவதைத் தவிர்க்கிறேன்) எனது திறமைக் குறைவினால் அல்ல, மற்றும் பல காரணங்களால் என்று அந்தக் குழந்தைகள் உணர்ந்தால் விரைவில் தோல்வியின் அதிர்சியிலிருந்து மீண்டு வெற்றியை நோக்கி நடை போடுவார்கள்.
இதற்கான பொறுப்பு பெற்றோர்களிடத்திலும் போட்டி நடத்துபவர்களிடத்தலும் தான் இருக்கிறது.
கடந்த பல ஆண்டுகளாக பல இடங்களில் எல்லா வயதினர்க்கும் பலவிதமான போட்டிகளை நடத்திய அனுபவத்தில் தோன்றிய கருத்து.
அன்புடன், குமார்(சிங்கை)
----- Original Message ---- From: Siva Sankar < href="http://groups.google.co.ve/groups/unlock?_done=/group/muththamiz/msg/d7181cfc53271a15&msg=d7181cfc53271a15" target="_parent">...@gmail.com> To: muththamiz@googlegroups.com Cc: பிரியமுடன்..iTamizhFriends <> Sent: Monday, May 7, 2007 3:12:01 PM Subject: [muththamiz] Re: AirTel Super Singer
என்னைக்கேட்டால் இந்த நிகழ்ச்சியை தடைசெய்யவேண்டும் என்று கூறுவேன், குழந்தைகளை சிறுவயதிலேயே மனதை ஒடித்து ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தி, ச்சே, ஒரே ஒரு முறை தான் இதனை டிவியில் பார்த்தேன், அபடியே மனசே ஒடிஞ்சிபோச்சி, அதுங்க அழுதுக்கிட்டு வர்றது பார்க்கறப்போ...:( என்ன நிகழ்ச்சியோ, என்ன கண்றாவியோ :((
On 5/7/07, ஷாரா
உடல் நலம், கண்
இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் பதின் வயதுகளிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு அலைவதை பார்க்க முடிகிறதல்லவா ? சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம் அல்லவா ?
அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.
4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.
அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.
குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.
சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.
வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.
ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.
கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.
குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.
அதெப்படி இன்றைக்கு மட்டும் மிக மிக இளம் வயதிலேயே கண்ணாடி தேவைப்படுகிறது ? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது ஆஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி.
4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது.
அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம்.
குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகும்.
சிங்கப்பூரில் 30 விழுக்காடு குழந்தைகளுக்கும் இந்த நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒரு திடுக் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. அங்கே குழந்தைகள் வெளியே அலைவது மிகவும் குறைவு என்பதால் வருவதாம் இந்தப் பிரச்சனை.
வீடுகளில் தொலைக்காட்சியிலும், கணினி விளையாட்டுகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டு இறுக்கிக் கட்டப்பட்ட அடுக்கு மாடிகளில் குடியிருப்போர் அதிக கவனத்துடன் குறித்துக் கொள்ள வேண்டிய செய்தி இது.
ஏற்கனவே வெயிலில் கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையானது எனும் ஆராய்ச்சிகள் வெளிவந்திருக்கின்றன. இப்போது, வெளியே சரியான நேரம் செலவிடவில்லையேல் பார்வைக்கே பிரச்சினை என்னும் புது ஆராய்ச்சியும் அத்துடன் சேர்ந்து கொண்டிருக்கிறது.
கிராமங்களில் சுதந்திரமாய் ஓடி விளையாடும் சிறுவர்கள் நல்ல ஆரோக்கியமான பார்வையுடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாய் இருக்கக் கூடும்.
குழந்தைகளின் வாழ்க்கை அறைகளுக்கும் ஒரு நாள்காட்டியைப் போல தொங்குவதற்கானதல்ல, ஒரு பட்டத்தைப் போல வானில் பறந்து திரிவதற்கானது. இயற்கையுடன் இணைந்து வாழ்தலே வலிமையானது என்பதை இந்த ஆராய்ச்சியும் வலியுறுத்துகிறது.
சிறுவர்களின் சிந்தனை
‘ஆணும் பெண்ணும் சமமா?’’ என் கேள்வி அங்கே குழுமியிருந்தவர்களிடம் எவ்வித இடறலையும் ஏற்படுத்தவில்லை என்பதை உடனே அறிந்து மகிழ்ந்தேன். ஏனெனில் உடனே சிறுமிகள் மத்தியில் ‘சமம், சமம்’ என இரண்டு முறை குரல்கள் ஒலித்தன. ஆனால் சிறுவர்கள் ஏதும் பேசாமலிருந்தனர். இது சிறு நடுக்கத்தை ஏற்படுத்தியது என்னுள்.
‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.
‘‘என்ன பேசாம இருக்கீங்க?’’ பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.
‘‘அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா…’’
‘‘என்ன ஆனா? ஆவன்னா?’’ எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ‘‘ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே’’ என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.
பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.
‘‘பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!’’ சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உடனே ஒரு சிறுமி எழுந்து ‘‘நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சு£தந்திரமே இல்ல’’ என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.
‘‘ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?’’
சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான_ குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான_ இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.
‘‘எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?’’ நான் கேட்டேன்.
‘‘அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்’’
‘‘அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’
சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு ‘சபாஷ்’ உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.
‘‘எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?’’ என் கேள்வி குழப்பத்தை _ அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.
எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.
‘‘எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?’’
ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.
‘‘பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?’’
விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.
‘‘ரொம்ப சூப்பரா இருக்கும்!’’ சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.
‘‘அடேயம்மா’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.
‘‘என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?’’
அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,
‘‘நாடு நாசமாப்பூடும்’’ என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.
நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.
‘‘ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?’’
‘‘ஓ. நிச்சயமா டீச்சர்’’ கோரஸ்.
‘‘சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?’’
‘‘சத்தியமாக மாட்டோம்.’’
இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ‘‘அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க’’ என்றார்.
‘‘உண்மையைத்தான் சொல்கிறோம்.’’
‘‘அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க’’ என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
‘‘சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.’’ அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.
ஆசிரியர் கப்சிப்.
‘‘சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?’’ என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,
‘என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?’’ என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.
‘‘செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.’’ இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.
பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி _ சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறுக்கு அருகேயிருக்கும் ஊரொன்றில் வேறொரு வேலையாகப் போன சிவகாமி, பள்ளி மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதன் சாராம்சந்தான் மேலே இருப்பது. தொடர்ச்சியை ஏப்ரல் மாத தீராநதியில் படிக்கலாம். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் இதே கேள்விகளும் பதில்களும் மேலே இருப்பதுபோலவே இருந்ததாக சிவகாமி சொல்கிறார்.
இஸ்ரேல், போலந்து, க்ரீன்லாந்து போன்ற நாடுகளில் பெண்களுக்கான கட்சி என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் உருவானாலும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. சில வருடங்களுக்குப்பிறகு அந்தக் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமற்போனது.
ஆனாலும், மேலே அந்தச் சிறுமிகளின் சிந்தனை யோசிக்க வைக்கிறது இல்லையா. எங்கே ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துச் சிறுமிகள் இவ்வளவு தெளிவுடன் இருப்பது நம்பிக்கை கொடுக்கிறதுதான்.
‘‘என்ன ஆம்பிளைப் பிள்ளைகளெல்லாம் பேசாமலிருக்கீங்க?’’ சாம்பலைக் கிளறியது போலிருந்தது என் கேள்வி.
‘‘என்ன பேசாம இருக்கீங்க?’’ பூட்டுத் துவாரத்தில் சாவியைத் திருகுவது போல் திரும்பவும் என் குடைச்சல் ஒலித்தது.
‘‘அவங்க சொல்றது சரிதான் டீச்சர். ஆனா…’’
‘‘என்ன ஆனா? ஆவன்னா?’’ எனது ஆவன்னாவினால் சற்றே பயந்த சிறுவர்கள், ‘‘ஆனா அவங்க சுதந்திரமா இல்லையே’’ என்ற ஒரு சிறுவனின் குரலால் தங்களை வெளிப்படுத்தினார்கள்.
பரவாயில்லையே என்று வியந்து கொண்ட நான் விபரங்கேட்டேன்.
‘‘பின்னே என்ன டீச்சர், அவங்க சாயந்தரம் ஆனா வீட்டுக்குள்ளே அடைஞ்சி டி.வி. சீரியல் பாக்கிறாங்க. எங்களைப் போல வெளியே வந்து வெளையாட மாட்டேங்குறாங்களே!’’ சிறுவன் ஒருவன் சொல்லவும், மற்ற சிறுவர்கள் கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.
உடனே ஒரு சிறுமி எழுந்து ‘‘நாங்களா வெளியே விளையாட மாட்டேங்குறோம். எங்களை வெளியே விளையாட விட்டாத்தானே? எங்களுக்கு சு£தந்திரமே இல்ல’’ என்றார்கள். மற்ற சிறுமிகள் ஆமோதித்தனர்.
‘‘ஒருவேளை பெண்கள் மட்டும் விளையாட கிராமத்திலே விளையாட்டுத்திடலும் அதற்கான உபகரணங்களும் இருந்தால் பெண்களும் விளையாடுவார்கள்தானே?’’
சிறு விதையைப் போட்டு வைத்தேன். எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான_ குறிப்பாக இளம் பெண்கள் விளையாடுவதற்கான_ இடத்தையும் அவர்களின் வகைவகையான விளையாட்டுக்களையும் பற்றி நான் கற்பனை செய்யத் துவங்கினேன் என்பது வேறு விஷயம்.
‘‘எல்லா கிராமங்களிலும் பெண்கள் விளையாடுவதற்கான இடங்களை யார் ஏற்படுத்தித்தர முடியும்?’’ நான் கேட்டேன்.
‘‘அந்தந்தப் பள்ளிக்கூடங்கள்’’
‘‘அவன் சொல்றது தப்பு டீச்சர். அரசாங்கம்தான் ஏற்படுத்தித் தரவேண்டும்.’’
சரியான விடை சொல்லிய சிறுமியைப் பாராட்ட ஒரு ‘சபாஷ்’ உடன் ஒரு பத்து ரூபாய்த்தாள் பரிசளிக்கப்பட்டது. பரிசு பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் பேச வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கியதாக நான் எண்ணிக்கொண்டேன்.
‘‘எந்த அரசாங்கம் இதுவரை பெண்களைப் பற்றி அதிகம் சிந்தித்து அக்கறையுடன் செயல்பட்டுள்ளது?’’ என் கேள்வி குழப்பத்தை _ அதாவது மத்திய அரசாங்கமா அல்லது மாநில அரசாங்கமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று எண்ணினேன். ஆனால் குழப்பமேயில்லாமல் மாணவிகளிடமிருந்து பதில் வந்தது.
எந்த அரசும் இதுவரை பெண்கள் குறித்து அக்கறையுடன் செயல்படவில்லை என்பது அவர்கள் பதிலாக இருந்தது. அந்த ஒருமித்த குரல் ஆச்சரியப்படுத்தியது. பெண் குழந்தைக் கல்வி உதவித் திட்டம், திருமண உதவித்திட்டம், பேறுகால உதவித்திட்டம், விதவைகள் பென்ஷன் திட்டம், கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித் திட்டம், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 சதவிகித ஒதுக்கீடு திட்டம், வரதட்சனை ஒழிப்புச் சட்டம், சிசுக்கொலை தடுப்புச்சட்டம், விவகாரத்து ஜீவனாம்சத்திற்கான சட்டம், ஆண் பெண் சமக்கூலி சட்டம், மற்றும் சமீபத்திலான குடும்ப வன்முறைச் சட்டம் ஆகிய இத்தனைச் சட்டங்களும் பல்வேறு திட்டங்களும் இயற்றப்படும் சிறு பெண் குழந்தைகள் சிந்தனையில் தாங்கள் போதுமான அளவு அக்கறையுடன் கவனிக்கப்படவில்லை என்ற எண்ணம் பரவலாக இருந்து வருவதை எண்ணினேன். இவையாவும் ஆண் பெண் சமத்துவத்தையும், பெண் சுதந்திரத்தையும் அளித்து விடவில்லை என்பதை அவர்களது புரிதல் உணர்த்தியது.
‘‘எந்த அரசும் பெண்களைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை என்றால் பெண்களே ஆட்சி செய்யும்போது பெண்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று நம்பலாமா?’’
ஆம் என்றார்கள் அனைத்து மாணவிகளும்! சிறுவர்கள் வழக்கம்போல் அமைதி காத்தனர்.
‘‘பெண்களே ஆட்சி செய்ய வேண்டுமென்றால் பெண்களுக்கான தனி அரசியல் கட்சி வேண்டுமே? பெண்கள் தங்களுக்கென ஒரு அரசியல் கட்சியைத் துவங்கினால் எப்படியிருக்கும்?’’
விளையாட்டாய்க் கேட்டேன் அவர்களிடம்.
‘‘ரொம்ப சூப்பரா இருக்கும்!’’ சந்தோஷத்துடன் ஆரவாரத்துடன் சிறுமிகள் கோஷமிட்டனர்.
‘‘அடேயம்மா’’ என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்.
‘‘என்ன பசங்களா, எல்லோரும் மௌனமா இருக்கீங்க? பெண்கள் அரசியல் கட்சியைத் துவக்கினால் எப்படியிருக்கும் என்று நீங்கள் சொல்லவில்லையே?’’
அவர்கள் விடாது மௌனம் காக்கவே, சிவப்புக் கலர் சட்டை அணிந்திருந்த பையனை எழுப்பிவிட்டேன். சிவப்பு முற்போகின் வண்ணமல்லவா? அவன் எழுந்தான். அவசரமான குரலில்,
‘‘நாடு நாசமாப்பூடும்’’ என்றான். எல்லா சிறுவர்களும் கைதட்டினார்கள், அவனுடை வெளிப்பாட்டை ஆதரித்து.
நாசமாய்ப்போகிற அந்த எண்ணத்தை ஆதரித்து விளக்கம் கேட்க விரும்பாமலும், சிறிய குழந்தைகளை மேலும் கேள்விகள் அல்லது விளக்கங்கள் கேட்டு வற்புறுத்த வேண்டாம் என்பதினாலும் மாணவிகளை நோக்கி கேள்விகளை எறிந்தேன்.
‘‘ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். பெண்கள் தனி அரசியல் கட்சி துவங்கினால் எல்லாப் பெண்களும் அதில் உறுப்பினர்கள் ஆவார்களா?’’
‘‘ஓ. நிச்சயமா டீச்சர்’’ கோரஸ்.
‘‘சரி, உங்களுக்குப் போதிய அதிகாரம் கிடைக்கவில்லை என்பதற்காகத்தானே தனி அரசியல் கட்சி துவக்குகிறீர்கள், வாருங்கள் உங்களுக்கு அதிகாரம் தருகின்றோம் என்று இப்போதிருக்கும் அரசியல் கட்சிகள் அழைத்தால் போய்விடுவீர்களா?’’
‘‘சத்தியமாக மாட்டோம்.’’
இவர்கள் என்ன சிறுமிகளா அல்லது அரசியல் மாணவிகளா என்று எனக்கு நம்புவதற்குக் கடினமாக இருந்தது. உடனிருந்த கலையரசன் சற்று பதற்றத்துடன் ‘‘அம்மா கேட்கிறாங்களேன்னுதானே நீங்க இப்படி பதில் சொல்றீங்க? உண்மையைச் சொல்லுங்க’’ என்றார்.
‘‘உண்மையைத்தான் சொல்கிறோம்.’’
‘‘அப்போ பெண்களுக்கான அரசியல் கட்சியைத் துவக்கிடலாம்னு சொல்லுங்க’’ என்று ஏமாற்றத்துடன் ஆசிரியர் ஒருவர் கூறினார்.
‘‘சார், பெண்களுக்கான அரசியல் கட்சியை ஆண்கள் துவக்க முடியாது.’’ அவர்களில் ஒரு பெண் எழுந்து உரத்த குரலில் கூறினாள்.
ஆசிரியர் கப்சிப்.
‘‘சரி, பெண்கள் கட்சியில் ஆண்கள் இருக்கலாமா?’’ என்னுடைய கேள்விக்கு முதலில் முடியாது என்றும் பிறகு நல்ல ஆண்களை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் பதில் வந்ததும் அவர்கள் பதிலில் ஆண்களையும் அரவணைக்கும் தாய்க்குணம் வெளிப்பட்டதால்,
‘என்ன பசங்களா, பெண்கள் தங்கள் கட்சியைத் துவக்கி விட்டார்கள். உறுப்பினராக சேர்வதற்குத் தயாரா?’’ என்று அவர்களை நோக்கி ஆவலுடன் கேட்டேன்.
‘‘செத்தாலும் அந்தக் கட்சியில் நாங்கள் சேரமாட்டோம்.’’ இப்படி சிறுவர்கள் உறுதியுடன் கூறினார்கள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளோடு ஆண் பெண் ஏற்றத்தாழ்வுகளும் விஷமூட்டிய வித்துக்களின் முளைகள் போல் வீரியத்துடன் வளர்ந்து வந்திருக்கின்றன என்றெண்ணி வியப்பும் வருத்தமுங் கொள்ளாதிருக்க இயலவில்லை என்னால்.
பதினைந்து வயதிற்குற்பட்ட சிறுமி _ சிறுவர்களிடையே இப்படிப்பட்ட எண்ணங்கள் என்றால் பெரிய விருட்சமாகி அனுபவத்தில் கிளைத்த வேர்களில் எத்தனை உரமிருக்கும்?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யாறுக்கு அருகேயிருக்கும் ஊரொன்றில் வேறொரு வேலையாகப் போன சிவகாமி, பள்ளி மாணவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசியதன் சாராம்சந்தான் மேலே இருப்பது. தொடர்ச்சியை ஏப்ரல் மாத தீராநதியில் படிக்கலாம். இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னொரு பள்ளிக்கூடத்திலும் இதே கேள்விகளும் பதில்களும் மேலே இருப்பதுபோலவே இருந்ததாக சிவகாமி சொல்கிறார்.
இஸ்ரேல், போலந்து, க்ரீன்லாந்து போன்ற நாடுகளில் பெண்களுக்கான கட்சி என்ற பெயரில் சில அரசியல் கட்சிகள் உருவானாலும் எதையும் பெரிதாக சாதிக்கவில்லை. சில வருடங்களுக்குப்பிறகு அந்தக் கட்சிகள் இருந்த சுவடே தெரியாமற்போனது.
ஆனாலும், மேலே அந்தச் சிறுமிகளின் சிந்தனை யோசிக்க வைக்கிறது இல்லையா. எங்கே ஒரு மூலையில் இருக்கும் கிராமத்துச் சிறுமிகள் இவ்வளவு தெளிவுடன் இருப்பது நம்பிக்கை கொடுக்கிறதுதான்.
சுட்டிகள் பற்றி ஒரு சுட்டி
இந்த காலத்து சுட்டிகளை பார்க்கும் போது பொடிசுகளாய் இருந்து கொண்டு அதுகள் பண்ற கூத்துகளை பார்த்து "அட குழந்தைதானே விட்டுத் தள்ளு"னு சொல்ல மனசு வருவதில்லை.ஒரு வயசே ஆன வாண்டு ஒன்று அப்படியே கையை வீசி அடிக்கின்ற அடி குட்டி ரவுடி போலிருக்கும். தனக்கு முக்கியத்துவம் தராமல், தன்னை யாரும் சட்டைபண்ணாதிருந்தால் ஏங்கி ஏங்கி அது அழுகின்றது.நம்மன போராட்டங்களை ஆறுமாத குழந்தையும் புரிந்துகொள்கின்றதே அது எப்படி?.ஆசையாய் அள்ளினாலும் அதற்கு புரிகின்றது, எரிச்சலில் அதட்டினாலும் அதற்கு புரிகின்றது.ஆன்மாக்கள் பேசிக்கொள்கின்றனவோ? அவை நம் மரமண்டைகளுக்கு புரிகின்றதில்லையோ?ஒன்று மட்டும் புரிகின்றது வயிற்றில் உதைக்கும் போதே அக்குழந்தைக்கும் மனித குணம் வந்துவிடுகின்றது."Out of the box" குழந்தையும் டிப்பிக்கல் மனிதனே. தன்னை பதப்படுத்திப் பின் கடவுளுக்கு இணையாகின்றான்.குடுமிபிடி சண்டை போட்டுக்கொண்டாலும் வெட்டென மறந்து ஒட்டிக்கொள்கின்ற அந்த அபூர்வப்பண்பு இருக்கின்றதே-அங்கு தான் குழந்தைகள் நிற்கின்றார்கள்.பிரபலங்கள் பலரும் இப்படி சுட்டியாய் இருக்கும் போது எப்படி இருந்தார்கள் எனப்பார்க்க இங்கே செல்லுங்கள்.Well known`s Childhood Picturesமதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனை நண்பர் நாசர் சொல்லும் போது பிறக்கும் குழந்தைகள் கூட இருதய பிரச்சனையோடு பிறப்பதுண்டு என்கின்றார்.இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 3,00,000 குழந்தைகள் இதயக்கோளாறோடு பிறக்கின்றனவாம்.ஆரம்பத்திலியே அதை கண்டறிந்தால் அதை சரியாக்குவதற்கான வசதிகள் இக்காலங்களில் இருக்கின்றனவாம்.அது பற்றிய விழிப்புணர்வையூட்ட அவர் உருவாகிய ஒரு யூடியூப் வீடியோ படம் இங்கே.http://www.youtube.com/user/meenakshimissionஉங்கள் முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துக்கள் நாசர்!!தாகூரின் வரிகள் நினைவுக்கு வருகின்றது."ஒவ்வொரு குழந்தையும் இறைவனிடமிருந்து ஒரு செய்தியைக் கொண்டு வருகிறது.மனிதனைக் கண்டு கடவுள் இன்னும் வெறுப்படையவில்லை அதைரியப்படவில்லை என்பதே"
வெள்ளி, 9 ஜனவரி, 2009
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)