திங்கள், 4 அக்டோபர், 2010

சிங்கப்பூரில் தனது முதலாவது ரீடெயில் கிளையை அமைத்தது ஐசிஐசிஐ

மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சிங்கப்பூரில், தனது முதலாவது ரீடெயில் கிளையை அமைத்துள்ளது. இதுகுறித்து ஐசிஐசிஐ வங்கி வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாந்தா கோச்சார் வெளியி்ட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : தங்கள் வங்கி, 2003ம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரில் கார்பரேட் வங்கியாக இயங்கி வருவதாகவும், தற்போது தான் முழுமையான வங்கி செயல்பாட்டிற்குரிய அனுமதியை பெற்றிருப்பதாகவும், இனி, தங்கள் சிங்கப்பூர் கிளை மூலம், அனைத்து வங்கி பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். தங்களது வங்கியின் சிங்கப்பூர் கிளையில், லோன் சிண்டிகேசன், இந்தியன் கார்ப்பரேட்ஸ், தொழிற் சேவைகள் மற்றும் வெல்த் மேனேஜ்மெண்ட் நிறுவனங்களுக்காக ஸட்க்ரக்சர்டு பைனான்சியல் ‌சொல்யூசன்ஸ் உள்ளிட்ட உதவிகளை செய்து தர உள்ளதாகவும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு அடுத்து, சிங்கப்பூரில் ரீடெயில் கிளையை அமைத்த வங்கி தங்களுகடையது என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.